மேலும்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் சிறிலங்கா பயணம்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் இக்ரம் உல் ஹக் தலைமையிலான உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்கா வரவுள்ளது.

நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்பு வரவுள்ள இந்தக் குழுவினர், எதிர்வரும் 05ஆம் நாள் வரை இங்கு தங்கியிருந்து, சிறிலங்கா அரச பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

சிறிலங்கா- பாகிஸ்தான் ஆயுதப் படை பாதுகாப்பு கலந்துரையாடலிலும், இந்தக் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில் வைத்யரத்னவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ள பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் இக்ரம் உல் ஹக், சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இரண்டு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கிடையிலான நிபுணத்துவ மற்றும் பரஸ்பர நன்மையளிக்கும் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *