மேலும்

அனுராதபுர சிறையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்தக் கோரியே எட்டு தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இயக்கத்தின் அமைப்பாளர் அருட்தந்தை சக்திவேல், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 107 அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதாக சிறிலங்கா அதிபர் உறுதியளித்திருந்தார் என்றும் எனினும், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார்.

சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் இதுகுறித்துக் கலந்துரையாடுவதற்கு தாம் கோரிக்கை விடுத்த போதும், அவர்கள் அதற்கு பொறுப்பான பதிலைத் தரவில்லை என்றும் அருட்தந்தை சக்திவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *