மேலும்

தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.

1987 செப்ரெம்பர் 15ஆம் நாள் நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உண்ணா நோன்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் நாள் உயிர்நீத்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், உண்ணாநோன்பை ஆரம்பித்த 31 ஆவது ஆண்டு நினைவு நாளான, இன்று நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பெருமளவானோர் வணக்கம் செலுத்தினர்.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், சிறப்பான இடம் ஒன்றில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாட்களை முன்னிட்டு, நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *