மேலும்

ஜப்பான்- சிறிலங்கா இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திர விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா- ஜப்பான் இடையிலான மூன்றாவது கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில்ட இடம்பெற்றது.

2015ஆம் ஆண்டு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானியப் பயணத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கலந்துரையாடல் கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

இந்தப் பேச்சுக்களில், இந்தோ- பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நிலைமைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், ஜப்பானின் கடல் தற்காப்புப் படை மற்றும் சிறிலங்காவின் கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் இந்தச் சந்திப்பின் போது இணக்கப்பாடு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *