அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது
அவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 29 வீதமாக அதிகரித்துள்ளது என்று தேர்தல் கண்காணப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் 100 மில்லியன் டொலர் செலவிலான இரண்டு சூரியசக்தி மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாக புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
கண்டியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைத் தாக்குதலானது ‘மதம் சார்ந்த தாக்குதல் அல்ல. நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட- இரண்டு கிளர்ச்சிகளை எதிர்கொண்ட ஒரு சமூகம் சந்தித்த மிருகத்தனமான சம்பவங்களின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது என்று முன்னாள் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் ஆங்காங்கே இன்னமும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து நாள் பயணமாக இன்று ஜப்பானைச் சென்றடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கண்டித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடவுள்ளார்.