இன்று ஜப்பான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து நாள் பயணமாக இன்று ஜப்பானைச் சென்றடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று காலை 8 மணியளவில் ஜப்பானின் நரிடா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைவார்.
இந்தப் பயணத்தின் போது, ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ள சிறிலங்கா அதிபர், ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிட்டோவையும் சந்திப்பார்.
சிறிலங்கா அதிபருடன் அமைச்சர்கள் திலக் மாரப்பன, நிமல் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும், ஜப்பான் சென்றுள்ளனர்.