மேலும்

ஜெனிவாவில் களம் இறங்குகிறார் அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப்

Stephen-Rappஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, பல்வேறு பக்க அமர்வுகள் பேரவை வளாகத்தில் இடம்பெற்று வருகின்றன.

“பாரிய கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு அனைத்துலக முறைமை எவ்வாறு தோல்வி கண்டது: சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நீடிக்கும் சட்டவிரோத தடுத்து வைப்பு, சித்திரவதை, பாலியல் வன்முறைகள்” என்ற தொனிப்பொருளில், பக்க அமர்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

12 ஆம் இலக்க பக்க அறையில், இன்று மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பக்க அமர்விலேயே, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் நிபுணரான ஸ்டீபன் ராப் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன், கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளர் றிச்சாட் ரொஜெர்சும் இதில் பங்கேற்கிறார்.

இந்த பக்க அமர்வை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்கு செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *