மேலும்

அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனுப்புவதை பிற்போட்டது தேர்தல்கள் ஆணைக்குழு

postal-votesஉள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டுகளை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பிற்போட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, 560,536  அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான வாக்குச்சீட்டுகளை இன்று அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்க தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக திட்டமிட்டிருந்தது.

எனினும், அஞ்சல் திணைக்கள பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சில நிர்வாக காரணங்களால், வாக்குச் சீட்டுகளை கையளிப்பதை எதிர்வரும் 13ஆம் நாள் வரை பிற்போடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மட்டும் இந்த முடிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *