அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகளுக்கிடையில் புலனாய்வு நிபுணத்துவ பரிமாற்றங்கள்
அமெரிக்க கடற்படையின் பசுபிக் கப்பல்படையின் பிரதிநிதியான லெப்.கொமாண்டர் ரூபென் புலோப்வ்ஸ்ரெய்ன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா கடற்படையினர் மற்றும் அமெரிக்க கடற்படை புலனாய்வுப் பணியகம் மற்றும் அமெரிக்க பசுபிக் கடற்படை ஆகியவற்றுக்கிடையில், புலனாய்வு விடயங்கள் தொடர்பான நிபுணத்துவ பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஒருகட்டமாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த, விடயங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் லெப்.கொமண்டர் பிரையன் பேஜும் கலந்து கொண்டார்.