சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளைச் சாடும் சீனத் தூதுவர்
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான வாய்ப்புகளுக்கான ஒரு கருவியாக பயன்படுத்துவதற்குப் பதிலாக, சிறிலங்காவின் சாதாரண பொதுமக்களுக்கு உதவுவதில் ஏனைய வெளிநாடுகள் கவனம் செலுத்த முடியும் என்று சீனத் தூதுவர் ஷி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவுக்கு பெரியளவில் கொடைகளை வழங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். இதில் சுகாதாரத் துறை முக்கியமானதாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கொடைகளில் மூன்றில் ஒரு பங்கு இதற்கே வழங்கப்படுகிறது.
சீனாவின் உதவிகள் வெளிப்படையானது. மக்களின் வாழ்வாதாரத்திலேயே பிரதானமாக கவனம் செலுத்துகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.