எந்த நாட்டின் அகதிகளுக்கும் சிறிலங்காவில் அனுமதியில்லை- பிரதமர் ரணில்
எந்த நாட்டில் இருந்து வந்தாலும், அடைக்கலம் கோரும் அகதிகளை சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரொஹிங்யா அகதிகள் தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு தொடர்பாக, அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ நல்லாட்சி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் எந்த அகதிகளையும் ஏற்றுக் கொள்ளும் முடிவு எடுக்கப்படவில்லை.
எந்தவொரு நாட்டினதும் எந்தவொரு குடிமகனும், குடிவரவு நடைமுறைகளுக்கு அமைவாக சிறிலங்காவுக்குள் நுழையலாம்.
மியான்மாரின் ரொஹிங்யா அகதிகள் இலகுவாக பங்களாதேஸ் அல்லது தாய்லாந்துக்குள் நுழையலாம்.
ஆனால் அவர்கள் இங்கு வருவதற்கான நோக்கம், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியாக தெரிகிறது. சிறிலங்கா அரசாங்கம் அத்தகைய சூழ்ச்சிகளை அனுமதிக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.