மேலும்

ஐ.நா உதவிச் செயலருடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சந்திப்பு

Oscar Fernandez-Taranco -prasadஅமைதியைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரன்கோவுடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரின் ஒரு பக்க நிகழ்வாக நேற்று இடம்பெற்றது.

சிறிலங்காவுக்கு தொடர்ந்து உதவிகளை அளிப்பது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

அமைதியைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் ஐ.நாவின் உதவிகளை சிறிலங்கா பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Oscar Fernandez-Taranco -prasad

இதற்கிடையே ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசுக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *