சிறிலங்கா படையினரை வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து பாதுகாப்போம் – மைத்திரி சூளுரை
போர் வீரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை நிகழ்ச்சி நிரல் மிகவும் வலுவானது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹொரவபொத்தான, ரிதிகஹவெவ விகாரையில், நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், உரையாற்றிய அவர்,
“இராணுவத் தளபதி தொடக்கம் கடைசி வீரர் வரை, எல்லா போர் வீரர்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்தும்.
நாட்டுக்காக போராடிய, வீரர்களை எந்தவொரு வெளிநாட்டுசக்திகளும், பிடித்துச் செல்வதற்கு அரசாங்கம் அனுமதிக்காது.
உடல் உறுப்புகளை இழந்த போர் வீரர்களைத் தாக்கி, துரத்திய அருவருப்பான செயலைப் புரிந்த அரசாங்கம் என்று முன்னாள் படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
போர் வீரர் அல்லாத மக்களை போராட்டத்துக்கு கொண்டு வந்ததே இந்தக் குழுவினர் தான். இப்போது அரசாங்கத்தைக் குற்றம்சாட்டுபவர்களே, இந்த நிலைமைக்கு காரணமாக இருந்தனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.