ஊடகவியலாளர்கள் சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டும் – நாடாளுமன்றில் கோரிக்கை
ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள், பொறுப்புக்களின் விபரங்களை வெளியிடவில்லை என்று ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதன் போதே, ஊடகவியலாளர்களும் தமது சொத்துக்கள், பொறுப்புகள் பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோரினார்.
இதற்கு, ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று கோரும், அதிகாரம் தனக்கு இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய பதிலளித்தார்.
அதேவேளை, இதனை ஊடகத்துறை அமைச்சின் ஊடாகப் பரிந்துரை செய்ய முடியும் என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்தார்.
ஊடகவியாளரை நசுக்கமுயலும் பழைய மந்திரி