மேலும்

நேற்றுமாலை புதுடெல்லி வந்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

tilak-delhiசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியை வந்தடைந்தார். அவரை இந்திராகாந்தி விமான நிலையத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், புதுடெல்லியில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா உள்ளிட்ட அதிகாரிகளும் வரவேற்றனர்.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள திலக் மாரப்பன, இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,உள்ளிட்டோரை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

நாளை, திலக் மாரப்பன தனது பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பவுள்ளார்.

tilak-delhi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *