இலத்தீன் அமெரிக்காவில் தன் மீதும் கோத்தா மீதும் விசாரணை நடத்தப்படும் என்கிறார் மகிந்த
தன் மீதும், தனது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச மீதும் கூட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரேசில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளில், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் விசாரணை செய்யப்படும் போது, நானும் எனது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், கூட குற்றம்சாட்டப்படுவோம்.
இந்த நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.