மேலும்

போர்க்குற்ற வழக்கினால் ஜெனரல் ஜெயசூரிய தப்பியோடவில்லை – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு

maheshini-kolonneஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே,

“பிரேசில், கொலம்பியா, பெரு, சிலி, ஆஜென்ரீனா, சுரினாம் ஆகிய நாடுகளுக்கான தூதுவராக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய ஜெனரல் ஜெயகத் ஜயசூரிய, நேற்றுமுன்தினம்  பிரேசிலை விட்டுப் புறப்பட்டு விட்டார். அவர் இன்று கொழும்பை வந்தடைவார்.

இந்த மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையிலேயே  நாடு திரும்புகிறார்.

போர்க்குற்ற வழக்கினால் அவர், பிரேசிலை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியான செய்திகள் தவறு.

அவரது பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. வழக்கினால் அவர் அங்கிருந்து வெளியேறவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *