மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு கொழும்பில் ஆரம்பம்

colombo-defence-seminor-2017 (1)சிறிலங்கா இராணுவம் நடத்தும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு-2017 பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.

வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல் – பூகோள போக்குகள் என்ற தொனிப் பொருளில் இடம்பெறும் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில், உள்நாட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 800 பேர் பங்கேற்கின்றனர்.

இந்த கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்துவதற்காக, அமெரிக்க கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வில்லியம் ஜே போலன், கொழும்பு வந்துள்ளார்.

colombo-defence-seminor-2017 (1)colombo-defence-seminor-2017 (2)colombo-defence-seminor-2017 (3)colombo-defence-seminor-2017 (4)

மேலும்,  சிம்பாப்வேயின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் போல் மிகோவா, பாகிஸ்தான் இராணுவத்தின் 11 ஆவது படைப்பிரிவின் தளபதி லெப்.ஜெனரல் நசீர் அகமட் பட், அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொபேர்ட் நோபல் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வல்லுனர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகள், மூத்த படை அதிகாரிகள், ஓய்வுபெற்ற படைத்தளபதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *