போர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? – அமெரிக்க அட்மிரலுக்கு சிறிலங்கா தளபதி விபரிப்பு
அமெரிக்க கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வில்லியம் ஜே போலன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பில் நடக்கும் பாதுகாப்புக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்துவதற்கு சிறிலங்கா வந்துள்ள அட்மிரல் வில்லியம் ஜே போலன் இன்று பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடினார்.
இதன் போது, வன்முறை தீவிரவாதம், சமாதான நுட்பங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதேவேளை, 2009ஆம் ஆண்டுக்கு முன்னர், முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது குறித்து அட்மிரல் வில்லியம் ஜே போலனுக்கு, சிறிலங்கா இராணுவத் தளபதி விபரித்துக் கூறியுள்ளார்.