ஜப்பான் செல்கிறார் மகிந்த ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் பத்து நாட்கள் அவர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, ஜப்பானில் உள்ள பௌத்த ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ள மகிந்த ராஜபக்ச, அங்குள்ள புலம்பெயர் சிங்களவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
ஆட்சியை இழந்த பின்னர் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்கு மேற்கொள்ளவிருக்கும் இரண்டாவது பயணம் இதுவாகும்.