பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்
பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள உள்ளக அரங்கு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய நேரப்படி நேற்றிரவு 10.35 மணியளவில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கப் பாடகி ஒருவரின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த மான்செஸ்டர் அரேனா அரங்கிலேயே இந்தக் குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உள்ளரங்கில் 18 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்த போதே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து. அந்தப் பகுதி முழுவதும், தடை செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.