மேலும்

அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை – ராஜித சேனாரத்ன

rajitha senaratneஅமைச்சரவை மாற்றம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக ஊடகங்கள் கடந்த சில நாட்களாக செய்திகளை வெளியிட்டு வந்தன.

இந்தநிலையிலேயே, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதையும் பேசவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமைச்சரவை மாற்றம் கூடிய விரைவில் இடம்பெற வாய்ப்பில்லை என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டும் மற்றொரு செய்தி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *