மேலும்

காலிமுகத்திடலில் குவிந்த மகிந்த ஆதரவாளர்கள் – இருவர் வெயிலுக்கு பலி

mahinda-mayday (3)காலிமுகத்திடலில் மகிந்த ராஜபக்ச தனது பலத்தைக் காட்டும் வகையில் நடத்திய மிகப் பிரமாண்டமான மேநாள் பேரணியில் பங்கேற்ற இருண்டு பேர் கடும் வெயில் வெப்பத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்தனர்.

ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு எதிரணி ஆகியவற்றுக்கிடையில் நேற்று டீமநாள் பேரணியில் அதிகளவானோரை அணிதிரட்டுவது யார் என்ற போட்டி இருந்தது.

இந்தப் போட்டியில் காலிமுகத்திடம் மைதானத்தை முற்றிலும் மனிதர்களால் நிறைத்து, மகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணி வெற்றிபெற்றது.

காலிமுகத்திடல் எங்கும் மக்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. கடும் வெயிலுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த மேநாள் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியில் பங்கேற்ற இரண்டு பேர் வெயிலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்த மரணமாகினர்.

mahinda-mayday (1)mahinda-mayday (2)mahinda-mayday (3)

அதேவேளை, கொழும்பில் நடந்த ஐதேகவின் மே நாள் பேரணியிலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேநாள் பேரணி கண்டி கெடம்பே மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த மைதானம் சிறியதாக இருந்ததால், பேரணியில் பங்கேற்றவர்களால் முழுமையாக மைதானத்துக்குள் நுழைய முடியாத நிலை காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *