மேலும்

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

U. R. de Silvaசிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் யு.ஆர்.டி .சில்வா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தும் பரிந்துரை முன்லைக்கப்பட்ட போதே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்.

வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை.

இது தொடர்பான சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும்.

சிறிலங்கா அதிபரும், பிரதமரும் கூட வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் ஈடுபடுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *