வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஐ.நாவுக்கு கூறிவிட்டோம் என்கிறார் மைத்திரி
போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.