நாட்டைப் பிரிக்க அனுமதியேன் – சிறிலங்கா பிரதமர்
தாம் ஒருபோதும் நாட்டைப் பிரிக்க அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு- மருதானையில் நேற்று புத்தர் சிலை ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
“நான் நாட்டைப் பிரிக்க அனுமதிக்க மாட்டேன். நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் அதிகாரங்கள் மாத்திரமே பகிரப்படும்.
எல்லா சமூகங்களும், ஒன்றுபட்டு சிறிலங்கா என்ற அடையாளத்தை உருவாக்க வேண்டும்.
மத நல்லுறவு முக்கியமானது. இன, மத வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றால் தேசிய முன்னேற்றத்தை அடைய முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.