மேலும்

நாள்: 22nd March 2017

ஜெனிவா தீர்மானம் கலப்பு நீதிமன்றத்தை வலியுறுத்தவில்லையாம்- ரணில் கூறுகிறார்

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் இணங்கவில்லை என்றும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கே அரசாங்கம் இணங்கியது என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது – உருத்திரகுமாரன்

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது என்று  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.