ரஷ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பை ஏற்றே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
வரும் மார்ச் 22ஆம் நாள் தொடக்கம் 3 நாட்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவில் பயணத்தை மேற்கொள்வார்.
இந்தப் பயணத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களு்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய சந்தைக்கு சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.