மேலும்

நிதி நகர உடன்பாடு குறித்து சீனாவுடன் மீண்டும் பேச்சு

port-cityசிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட துறைமுக நகர மற்றும் நிதி நகர உடன்பாடு தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடலில் உருவாக்கப்படும் புதிய நிலப்பரப்பில், மேலதிக பகுதியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பாகவே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புதிய துறைமுக நகர உடன்பாட்டுக்கு அமைய, காலி முகத்திடலை விடவும் எட்டு மடங்கு பெரிய பூங்கா ஒன்று அமைக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, 3 கி.மீ நீளமுள்ள கடற்கரை, 13 ஹெக்ரெயர் பரப்பளவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்படும்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள நிலப்பரப்பில் 35 வீதம் மாத்திரமே கட்டடங்கள் அமைக்கப்படும்.

புதிதாக உருவாக்கப்படும் நிலப்பரப்பில் அனைத்து உட்கட்டுமானப் பணிகளையும், சீன நிறுவனமே மேற்கொள்ளும். இதன் சுமை சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சுமத்தப்படாது என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் ஒருபகுதியாக, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகள், பூங்காக்கள், நடைபாதைகளும் அமைக்கப்படும்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள 269 ஹெக்ரெயர் நிலப்பரப்பில், 91 ஹெக்ரெயர்  பொதுமக்களின் பயன்பாட்டுக்கும், 62 ஹெக்ரெயர் சிறிலங்கா அரசின் அபிவிருத்தித் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

புதிய உடன்பாட்டுக்கு அமைய, புதிதாக உருவாக்கப்படும் நிலப்பகுதியில் 57 வீதமான பகுதி சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பெறப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *