மேலும்

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி? – அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தெரிவு

palanisamyசொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அதிமுகவின் புதிய சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்கியுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிச்சாமியை, சட்டமன்றக் குழு தலைவராக தெரிவு செய்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுனரை சந்தித்து, தமது முடிவை அறிவிக்கவுள்ளனர்.

ஆளுனர் இந்த முடிவை ஏற்றுக் கொண்டால் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்நாட்டின் 21 ஆவது முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி தமிழக அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

இதனிடையே, தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *