மேலும்

கடல் அலைகளில் இருந்து மின்சார உற்பத்தி – சிறிலங்காவுக்கு உதவ பின்லாந்து இணக்கம்

ranjith siyambalapitiyaகடல் அலைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும், பிந்திய தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்குவதற்கு, பின்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது.

சிறிலங்காவின் மின்சார அமைச்சின் நடந்த சிறப்பு கூட்டம் ஒன்றில், இந்த தகவலை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.

“கடல் அலைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய பிந்திய தொழில்நுட்பங்களை சிறிலங்காவுக்கு வழங்க பின்லாந்து தூதுவர் இணங்கியுள்ளார்.

எமது நாடு கடலால் சூழப்பட்டது. எனவே கடல் அலைகளில் இருந்து இலகுவாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

குறைந்த செலவுடன் பிந்திய தொழில்நுட்பங்களுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடியும். வரட்சியான காலகட்டங்களில், இந்த மின்சாரம் உதவியாக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *