மேலும்

சீனாவின் முதலீடுகள் சிறிலங்காவுக்குத் தேவை – ரணில்

ranilசீனாவின் முதலீடுகள் சிறிலங்காவுக்குத் தேவைப்படுவதால், சீன முதலீட்டாளர்களை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

முன்னர் சிறிலங்கா முதலீட்டாளர்களை சீனாவுக்கு அனுப்பியது. ஆனால், ஆனால் இப்போது சீன முதலீட்டாளர்கள் சிறிலங்காவுக்கு வர விரும்புகின்றனர்.

சீனா  முன்னர் முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்கி தனது நாட்டுக்கு அழைத்திருந்தது. அதன் மூலம் சீனா துரித வளர்ச்சியை அடைந்தது.

வெளிநாட்டு முதலீடுகளின் மூலமே இந்தியா, வியட்னாம் போன்ற நாடுகளும் அபிவிருத்தியடைந்துள்ளன.

ஆனால் சிறிலங்காவில் சில வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு எதிரணியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அத்தகைய திட்டங்கள், சிறிலங்காவின் இளையோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும்.

அரசியல் உறுதிப்பாடு இருப்பதால் முதலீட்டாளர்கள் இங்கு வர விரும்புகின்றனர்.

மேலும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு இலங்கையர்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *