மேலும்

விக்னேஸ்வரனின் கலப்பு நீதிமன்றம் கனவு மட்டுமே – மகிந்த சமரசிங்க

Mahinda Samarasingheவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை உருவாக்க எடுக்கும் நகர்வு வெறும் கனவு மட்டுமே என்றும், அது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“சில அரசியல்வாதிகள் வெளிநாட்டு சக்திகள் மற்றும் அமைப்புகளின் அடிமைகளாக இருந்து கொண்டு, குறிப்பிட்ட சில சலுகைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பணியாற்றுகின்றனர்.

நாம் எமது படைவீரர்களையும் காவல்துறை அதிகாரிகளையும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.

வடக்கு மாகாணசபையினால் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக செய்தி ஒன்றை படித்தேன்.

இது வடக்கு முதல்வரின் கனவு மாத்திரமேயாகும். ஒருபோதும் இது சாத்தியப்படாது.

எவரேனும் எமது படைவீரர்களைக் காட்டிக் கொடுப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அனுமதிக்கமாட்டார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *