உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா பிரதமர் சுவிஸ் பயணம்
டாவோசில் நாளை ஆரம்பமாகவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சுவிற்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாளை 17ஆம் நாள் தொடக்கம், 21ஆம் நாள் வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சுமார் 40 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டின் பக்க நிகழ்வாக, பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு சிறிலங்கா பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
அதேவேளை, சுவிஸ் அதிகாரிகளுடனும், அனைத்துலக வர்த்தகப் பிரதமுகர்களுடனும் அவர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.