ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து சீனாவுடன் பேசவில்லை – பீரிஸ்
சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, சீனாவுடன் கூட்டு எதிரணி பேச்சு நடத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்தியே என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்யப்படுவதை கூட்டு எதிரணி கடுமையான எதிர்க்கிறது.
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவுக்கு இசைவான கொள்கை ஒன்றை கடைப்பிடித்தது, எனினும், சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்கும் நகர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்திகளையே ஏற்படுத்தும்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு 750 ஏக்கர் காணிகளை வழங்கும் முன்னைய மூலத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.