மேலும்

19 தேசத்துரோகிகளை தேசிய வீரர்களாக அறிவித்தார் சிறிலங்கா அதிபர்

maithriவெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியதால், பிரித்தானிய ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்கினால், தேசியத் துரோகிகள் என்று பிரகடனம் செய்யப்பட்ட, கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரும், தேசதுரோக குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கண்டிய சிங்களத் தலைவர்களான கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரையும், 1818ஆம் ஆண்டு, ஜனவரி 10ஆம் நாள் தேசத் துரோகிகளாக அறிவித்திருந்தார் ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்.

198 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ரத்துச் செய்துள்ளார். அத்துடன்  இவர்களை சுதந்திரத்துக்கான போராடிய தேசிய வீரர்கள் என்றும் பிரகடனம் செய்துள்ளார்.

1818ஆம் ஆண்டு ஊவா வெல்லசவில் பிரித்தானிய அரசுக்கு எதிராக போராடியதால், கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரும், தேசத் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *