போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் நடவடிக்கை இல்லை – சிறிலங்கா மீது ஐ.நா குற்றச்சாட்டு
உள்நாட்டுப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு மாதமாக ஜெனிவாவில் நடந்து வந்த சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தொடரின் முடிவில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே, நிபுணர் குழுவின் உறுப்பினரான பெலிஸ் காயர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
‘உண்மை கண்டறியும் ஆணைக்குழுக்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் கொடுத்திருந்தது,
ஆனால், பொறுப்புக்கூறல் விவகாரங்களை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் முன்னகர்வதற்கான எந்த சான்றுகளையும் எம்மமால் காண முடியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.