மேலும்

சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் அமெரிக்க பசுபிக் கட்டளை தளபதி பேச்சு

harry-b-harris-lanka-1சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய காலி கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம், அட்மிரல் ஹரி ஹரிஸ் சிறிலங்கா வந்தார்.

நேற்று முன்தினம் அவர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

நேற்று கோல்பேஸ் விடுதியில் ஆரம்பமாகிய காலி கலந்துரையாடலில் பங்குபற்றிய அட்மிரல் ஹரி ஹரிஸ், சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்தினார்.

harry-b-harris-lanka-1harry-b-harris-lanka-2harry-b-harris-lanka-3

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி ஆகியோருடன் அமெரிக்கத் தளபதி இந்தப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்வது மற்றும். பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *