சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பிளேட்டன், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது பரஸ்பர நலன்கள் தொடர்பாக இருதரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பில் நடக்கும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான காலி கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பிளேட்டன் சிறிலங்கா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.