வரும் 28 ஆம் திகதி சீன அரச தலைவர்களைச் சந்திக்கிறார் மகிந்த
நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீன அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
நாளை 23ஆம் நாள் தொடக்கம் டிசெம்பர் 1ஆம் நாள் வரை, மகிந்த ராஜபக்ச சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர், வரும் 28ஆம் நாள், சீன அரசாங்கத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். இந்தப் பயணத்தின் போது பீஜிங் மற்றும், குவாங்சூ நகரங்களில் மகிந்த ராஜபக்ச தங்கவுள்ளார்.
அத்துடன் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும், சென்ஷென் நகரத்துக்கும் மகிந்த ராஜபக்ச பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
குவாங்சூ மாகாண அரசின் உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்., சென்ஷென் நகரசபை ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்வுகளிலும் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுடன், லொகான் ரத்வத்தை, ஜி.எல்.பீரிஸ், உதித் லொக்குபண்டார ஆகியோரும் சீனா செல்லவுள்ளனர் என்று மகிந்த ராஜபக்சவின் செயலகம் அறிவித்துள்ளது.