மேலும்

காணாமற்போனோரின் நிலை என்ன? – விபரம் வெளியிடக் கோருகிறது சர்வதேச செஞ்சிலுவைக் குழு

icrcகாணாமற்போயுள்ள 16 ஆயிரம் பேரின் நிலை என்னவென்று அவர்களி்ன் உறவினர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக ஜெனிவாவைத் தளமாக கொண்ட அனைத்துலக செஞ்சிலுவைக் குழு நடத்திய- 14 மாத கால ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள 34 பக்க அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உறுதியற்ற நிலையில் வாழுதல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சிறிலங்காவில் காணாமற்போன 16 ஆயிரம் பேரின் ஆயிரக்கணக்கான உறவினர்கள், பெரும்பாலும் தமிழர்கள் தமது அன்புக்குரியவர்களை இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

395 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட  ஆய்வில் மூன்றில் ஒரு பங்கினர், காணாமற்போயுள்ள தமது உறவுகள் இறந்து போயிருக்கலாம் என்று நம்புகின்றனர். மூன்றில் ஒரு பங்கினர் எங்காவது உயிருடன் இருக்கலாம் என்று நம்புகின்றனர். ஏனைய மூன்றில் ஒரு பங்கினர் எதையும் கூற முடியாமல் உறுதியற்ற நிலையில் இருக்கின்றனர்.

இந்தக் குடும்பங்களுக்கு காணாமற்போனவர்களின் நிலை என்னவென்று அறிவதே முக்கியமானதாக உள்ளது.

அதேவேளை, இவர்கள் நாளாந்த வாழ்வில் பொருளாதார, சட்ட, நிர்வாக ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

எனவே, காணாமற்போனவர்களின் நிலை என்ன, அவர்களுக்கு என்னவாயிற்று என்பதை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்” என்றும் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *