எதிர்கால முதலீடுகள் குறித்து சீனாவுடன் சிறிலங்கா பேச்சு
chinசிறிலங்காவில் எதிர்கால முதலீடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார இராஜதந்திரம் தொடர்பாக, சீனத் தூதுவர் ஷியான் லியாங்குடன் நீண்ட- பயனுள்ள பேச்சுக்களை நடத்தியிருப்பதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள முதலீடுகள், திட்டங்கள் தொடர்பாகவும், ஏனைய வழிமுறைகள் தொடர்பாகவும் பேச்சு நடத்தப்பட்டது என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.