மேலும்

சிங்கப்பூர் தலைவர்களை சந்தித்தார் சிறிலங்கா பிரதமர் – 5 உடன்பாடுகளும் கையெழுத்து

ranil-singapore (2)மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று சிங்கப்பூர் அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிங்கப்பூர் அதிபர் மாளிகையான இஸ்தானாவில் நேற்று செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அத்துடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லூனுடனும், சிங்கப்பூர் அதிபருடனும்  அவர் தனித்தனியாக பேச்சுக்களை நடத்தினார். இதனையடுத்து. இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.

ranil-singapore (2)ranil-singapore (1)

சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கைச்சாத்திடுவதற்கான புரிந்துணர்வு உடன்பாடு, மேல் மாகாண பாரிய அபிவிருத்திக்கான உடன்பாடு, கலாசார ஒத்துழைப்பு உடன்பாடு, அரசாங்க பணியாளர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் பரிமாற்றுவதற்குமான உடன்பாடு, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விக்கான உடன்பாடு ஆகியனவே இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *