மேலும்

கொழும்பு வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

Wang Yi -mangalaசீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானத்தில், சீன வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியுடன், 9 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவொன்றும் சிறிலங்கா வந்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில், சீன வெளிவிவகார அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படும்.

இதையடுத்து, இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *