மேலும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வேந்தராக அட்மிரல் தயா சந்தகிரி

Admiral Daya Sandagiri -msகொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனத்தை வழங்கினார்.

அட்மிரல் தயா சந்தகிரி, சிறிலங்கா கடற்படையின் 14 ஆவது தளபதியாக, 2001 தொடக்கம், 2005 வரையான காலப்பகுதியில் பணியாற்றியிருந்தார்.

Admiral Daya Sandagiri -ms

அதன் பின்னர், 2005 செப்ரெம்பரில், அட்மிரலாக தரமுயர்த்தப்பட்ட அவர், கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *