மேலும்

நம்பிக்கையில்லாப் பிரேணையைக் குழப்பிய நாடாளுமன்ற ஒலியமைப்புத் தொகுதி

parliamentசிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல், 1.30 மணியளவில் நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது, சிறிலங்கா பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க முனைந்தார்.

ஆனால் நாடாளுமன்ற ஒலியமைப்புத் தொகுதி தொழில்நுட்பக் கோளாறினால் செயற்படவில்லை.

ஒலிவாங்கிகள் செயற்படாததால் சபாநாயகர் கரு ஜெயசூரிய, சபை நடவடிக்கைகளை , 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து, மீண்டும் சபை கூடியபோதும், ஒலிவாங்கிகள் செயற்படவில்லை.

இதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நாளை காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *