பிரித்தானிய இராஜதந்திரிகள் சம்பந்தனுடன் சந்திப்பு
பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திரிகள் இருவர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
பிரித்தானிய வெளிவவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின் வதிவிடச் செயலர் சைமன் மக் டொனால்ட் மற்றும், அனைத்துலக அபிவிருத்திக்கான திணைக்களத்தின் நிரந்தரச் செயலர் மார்க் லோவ்கோக் ஆகிய இராஜதந்திரிகள் கொழும்பு வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று பிரித்தானியத் தூதரகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.