முன்னாள் இந்திய இராஜதந்திரி பார்த்தசாரதி யாழ். படைத் தளபதியுடன் சந்திப்பு
இந்தியாவின் ஓய்வுபெற்ற மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி மற்றும், புதுடெல்லியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் அசோக் மாலிக் ஆகியோர், நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.
நேற்றுக்காலை பலாலி படைத் தலைமையகத்துக்குச் சென்ற இவர்கள், யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின் போது, யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள், சிவில் நிர்வாக முறைமை, குறித்து, யாழ் படைகளின் தளபதி விளக்கமளித்தார்.
அத்துடன், ஜனநாயகம், நல்லிணக்கம், அபிவிருத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறிலங்கா இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துக் கூறினார்.
அதேவேளை, இந்தியக் குழுவினர், நேற்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயையும் சந்தித்து நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.