கொழும்புத் துறைமுகத்தில் இரண்டு ஜப்பானியப் போர்க்கப்பல்கள்
ஜப்பானியக் கடற்படையின், இரண்டு போர்க்கப்பல்கள் இன்று நல்லெண்ண மற்றும் விநியோகத் தேவைகளுக்கான பயணமாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.
உரகா மற்றும் தகஷிமாயாயேயாமா ஆகிய பெயர்களைக் கொண்ட போர்க்கப்பல்களே, கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.
இந்தப் போர்க்கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
இந்தப் போர்க்கப்பல்களில், ஜப்பானியக் கடற்படையின், 51 ஆவது கண்ணிவெடிகளை அகற்றும் டிவிசனின் தளபதி கப்டன் தாஷிஹிரோ தகாய்வாவும் சிறிலங்கா வந்துள்ளார்.
இவர், இன்று இரண்டு போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு நடத்தினார்.
ஜப்பானியப் போர்க்கப்பல்கள் எதிர்வரும் 14ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளன.