ஜெனிவா செல்ல முயன்ற 10 இலங்கையர்கள் மலேசியாவில் கைது
போலிக் கடவுச்சீட்டுகளுடன், பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வியட் ரைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மலேசியக் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் ஒன்றில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பத்துப் பேர் இலங்கையர்களாவர்.
போலிக் கடவுச்சீட்டில், இலங்கையர்கள் ஜெனிவா செல்லவிருந்தனர் என்று மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பணியாற்றும், குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இருவரும் இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.